முகப்பு | தொடக்கம் |
கோட்டங் கண்ணியும் |
275 |
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், |
|
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், |
|
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய |
|
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன் |
|
5 |
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, |
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது, |
|
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப, |
|
கன்று அமர் கறவை மான, |
|
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒரூஉத்தனார் பாடியது.
|