முகப்பு | தொடக்கம் |
சிறப்புடை மரபின் |
31 |
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
|
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, |
|
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, |
|
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, |
|
5 |
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் |
பாசறை அல்லது நீ ஒல்லாயே; |
|
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் |
|
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; |
|
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், |
|
10 |
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; |
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் |
|
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, |
|
குண கடல் பின்னது ஆக, குட கடல் |
|
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, |
|
15 |
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, |
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, |
|
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
|
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|