முகப்பு | தொடக்கம் |
சிறிய கள் பெறினே |
235 |
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! |
|
பெரிய கள் பெறினே, |
|
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! |
|
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
|
5 |
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! |
|
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! |
|
நரந்தம் நாறும் தன் கையால், |
|
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! |
|
10 |
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ, |
இரப்போர் கையுளும் போகி, |
|
புரப்போர் புன்கண் பாவை சோர, |
|
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் |
|
சென்று வீழ்ந்தன்று, அவன் |
|
15 |
அரு நிறத்து இயங்கிய வேலே! |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; |
|
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் |
|
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று |
|
20 |
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|