முகப்பு | தொடக்கம் |
சுவல் அழுந்தப் பல காய |
139 |
சுவல் அழுந்தப் பல காய |
|
சில் ஓதிப் பல் இளைஞருமே, |
|
அடி வருந்த நெடிது ஏறிய |
|
கொடி மருங்குல் விறலியருமே, |
|
5 |
வாழ்தல் வேண்டிப் |
பொய் கூறேன்; மெய் கூறுவல்; |
|
ஓடாப் பூட்கை உரவோர் மருக! |
|
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந! |
|
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி, |
|
10 |
கனி பதம் பார்க்கும் காலை அன்றே; |
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச் |
|
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை, |
|
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள், |
|
அருஞ் சமம் வருகுவதுஆயின், |
|
15 |
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே. |
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|