முகப்பு | தொடக்கம் |
செந்நெல் உண்ட பைந் தோட்டு |
344 |
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, |
|
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து, |
|
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு, |
|
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ |
|
5 |
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து, |
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ |
|
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே, |
|
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி.................. |
|
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.
|