முகப்பு | தொடக்கம் |
செய்குவம்கொல்லோ |
214 |
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே |
|
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி |
|
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே; |
|
யானை வேட்டுவன் யானையும் பெறுமே; |
|
5 |
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: |
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு, |
|
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின், |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின், |
|
10 |
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; |
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக் |
|
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, |
|
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவன் வடக்கிருந்தான் சொற்றது.
|