முகப்பு | தொடக்கம் |
செருப்பு இடைச் சிறு பரல் |
257 |
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால், |
|
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண், |
|
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய், |
|
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு, |
|
5 |
யார்கொலோ, அளியன்தானே? தேரின் |
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக் |
|
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை, |
|
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி, |
|
கையின் சுட்டிப் பையென எண்ணி, |
|
10 |
சிலையின் மாற்றியோனே; அவைதாம் |
மிகப் பலவாயினும், என் ஆம் எனைத்தும் |
|
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு, |
|
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே? |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
.............................................................................
|