முகப்பு | தொடக்கம் |
செற்றன்று ஆயினும் |
226 |
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், |
|
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; |
|
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, |
|
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார் |
|
5 |
மண்டு அமர் கடக்கும் தானைத் |
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|