முகப்பு | தொடக்கம் |
சேயிழை பெறுகுவை |
105 |
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி! |
|
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை |
|
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் |
|
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி |
|
5 |
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, |
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் |
|
நீரினும் இனிய சாயல் |
|
பாரி வேள்பால் பாடினை செலினே. |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
|