முகப்பு | தொடக்கம் |
தடவு நிலைப் பலவின் |
140 |
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் |
|
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்! |
|
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த |
|
அடகின் கண்ணுறைஆக யாம் சில |
|
5 |
அரிசி வேண்டினேமாக, தான் பிற |
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி, |
|
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் |
|
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர் |
|
தேற்றா ஈகையும் உளதுகொல்? |
|
10 |
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவனை ஒளவையார் பாடியது.
|