தண் துளி பல பொழிந்து

391
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப்
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற
5
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி,
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென,
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி
10
நன...............................................வினவலின்,
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என,
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற,
காண்கு வந்திசின், பெரும!...........................
15
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும்
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின்,
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு,
இன் துயி........................... ஞ்சால்
20
துளி பதன் அறிந்து பொழிய,
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே!

திணை அது; துறை கடைநிலை.
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.