முகப்பு | தொடக்கம் |
தமர் தற் தப்பின் |
157 |
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும், |
|
பிறர் கையறவு தான் நாணுதலும், |
|
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், |
|
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், |
|
5 |
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், |
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், |
|
கோடல் கண்ணி, குறவர் பெருமகன் |
|
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, |
|
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி, |
|
10 |
கட்சி காணாக் கடமான் நல் ஏறு |
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை |
|
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் |
|
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.
|