முகப்பு | தொடக்கம் |
தலையோர் நுங்கின் தீம் சேறு |
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|