முகப்பு | தொடக்கம் |
திண் பிணி முரசம் |
93 |
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் |
|
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் |
|
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, |
|
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் |
|
5 |
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, |
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், |
|
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் |
|
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, |
|
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த |
|
10 |
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என |
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ |
|
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து |
|
அண்ணல் யானை அடு களத்து ஒழிய, |
|
அருஞ் சமம் ததைய நூறி, நீ, |
|
15 |
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.
|