முகப்பு | தொடக்கம் |
தெண் கடல் வளாகம் |
189 |
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி |
|
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும், |
|
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான் |
|
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், |
|
5 |
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; |
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே; |
|
செல்வத்துப் பயனே ஈதல்; |
|
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|