முகப்பு | தொடக்கம் |
தோல் தா; தோல் தா என்றி |
300 |
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு |
|
துறுகல் மறையினும் உய்குவை போலாய்; |
|
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி, |
|
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன், |
|
5 |
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு |
ஓர் இல் கோயில் தேருமால் நின்னே. |
|
திணை தும்பை; துறை தானை மறம்.
| |
அரிசில் கிழார் பாடியது.
|