முகப்பு | தொடக்கம் |
நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர் |
72 |
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்; |
|
இளையன் இவன்' என உளையக் கூறி, |
|
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் |
|
நெடு நல் யானையும், தேரும், மாவும், |
|
5 |
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று |
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி, |
|
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை |
|
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு |
|
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய |
|
10 |
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, |
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி, |
|
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக; |
|
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி |
|
மாங்குடி மருதன் தலைவன் ஆக, |
|
15 |
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் |
புலவர் பாடாது வரைக, என் நிலவரை; |
|
புரப்போர் புன்கண் கூர, |
|
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.
|