முகப்பு | தொடக்கம் |
நரம்பு எழுந்து உலறிய |
278 |
'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள், |
|
முளரி மருங்கின், முதியோள் சிறுவன் |
|
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற, |
|
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் |
|
5 |
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ, |
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா, |
|
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய |
|
படு மகன் கிடக்கை காணூஉ, |
|
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.
|