முகப்பு | தொடக்கம் |
நல்லவும் தீயவும் |
106 |
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் |
|
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை |
|
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, |
|
மடவர் மெல்லியர் செல்லினும், |
|
5 |
கடவன், பாரி கை வண்மையே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|