முகப்பு | தொடக்கம் |
நன்று ஆய்ந்த நீள் |
166 |
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை |
|
முது முதல்வன் வாய் போகாது, |
|
ஒன்று புரிந்த ஈர் இரண்டின், |
|
ஆறு உணர்ந்த ஒரு முது நூல் |
|
5 |
இகல் கண்டோர் மிகல் சாய்மார், |
மெய் அன்ன பொய் உணர்ந்து, |
|
பொய் ஓராது மெய் கொளீஇ, |
|
மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய |
|
உரைசால் சிறப்பின் உரவோர் மருக! |
|
10 |
வினைக்கு வேண்டி நீ பூண்ட |
புலப் புல்வாய்க் கலைப் பச்சை |
|
சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய; |
|
மறம் கடிந்த அருங் கற்பின், |
|
அறம் புகழ்ந்த வலை சூடி, |
|
15 |
சிறு நுதல், பேர் அகல் அல்குல், |
சில சொல்லின், பல கூந்தல், நின் |
|
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர் |
|
தமக்கு அமைந்த தொழில் கேட்ப; |
|
காடு என்றா நாடு என்று ஆங்கு |
|
20 |
ஈர் ஏழின் இடம் முட்டாது, |
நீர் நாண நெய் வழங்கியும், |
|
எண் நாணப் பல வேட்டும், |
|
மண் நாணப் புகழ் பரப்பியும், |
|
அருங் கடிப் பெருங் காலை, |
|
25 |
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை, |
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது |
|
பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின், |
|
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும் |
|
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண், |
|
30 |
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; |
செல்வல் அத்தை, யானே; செல்லாது, |
|
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக் |
|
கழை வளர் இமயம் போல, |
|
நிலீஇயர் அத்தை, நீ நிலம்மிசையானே? |
|
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
| |
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|