முகப்பு | தொடக்கம் |
நாகத்து அன்ன பாகு |
367 |
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் |
|
தமவேஆயினும் தம்மொடு செல்லா; |
|
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; |
|
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் |
|
5 |
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, |
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய |
|
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, |
|
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; |
|
10 |
வாழச் செய்த நல்வினை அல்லது |
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; |
|
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் |
|
முத்தீப் புரையக் காண்தக இருந்த |
|
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! |
|
15 |
யான் அறி அளவையோ இதுவே: வானத்து |
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் |
|
பரந்து இயங்கு மா மழை உறையினும், |
|
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
|