நாடா கொன்றோ

187
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!

திணையும் துறையும் அவை.
ஒளவையார் பாடியது.