நிலம் பிறக்கிடுவது போலக்

303
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ,
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப
5
ஆட்டிக் காணிய வருமே நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்,
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப் பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.

திணையும் துறையும் அவை.
எருமை வெளியனார் பாடியது.