முகப்பு | தொடக்கம் |
நிலமிசை வாழ்நர் |
43 |
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர, |
|
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி, |
|
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும் |
|
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக் |
|
5 |
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ, |
தன் அகம் புக்க குறு நடைப் புறவின் |
|
தபுதி அஞ்சிச் சீரை புக்க |
|
வரையா ஈகை உரவோன் மருக! |
|
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் |
|
10 |
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல், |
கொடுமர மறவர் பெரும! கடு மான் |
|
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்: |
|
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் |
|
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது |
|
15 |
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி, |
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், |
|
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே; |
|
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் |
|
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என, |
|
20 |
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், |
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள் |
|
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி |
|
எக்கர் இட்ட மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
|