முகப்பு | தொடக்கம் |
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே |
217 |
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, |
|
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; |
|
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் |
|
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, |
|
5 |
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, |
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; |
|
'வருவன்' என்ற கோனது பெருமையும், |
|
அது பழுது இன்றி வந்தவன் அறிவும், |
|
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; |
|
10 |
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் |
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை |
|
அன்னோனை இழந்த இவ் உலகம் |
|
என் ஆவதுகொல்? அளியது தானே! |
|
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
|