முகப்பு | தொடக்கம் |
நீயே, புறவின் அல்லல் |
46 |
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் |
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, |
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, |
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; |
|
5 |
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, |
|
விருந்தின் புன்கண் நோவுடையர்; |
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
|