முகப்பு | தொடக்கம் |
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை |
274 |
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை, |
|
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் |
|
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே, |
|
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் |
|
5 |
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர, |
கையின் வாங்கி, தழீஇ, |
|
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே! |
|
திணை அது; துறை எருமை மறம்.
| |
உலோச்சனார் பாடியது.
|