நீலக் கச்சை, பூ ஆர் ஆடை

274
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே,
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
5
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர,
கையின் வாங்கி, தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே!

திணை அது; துறை எருமை மறம்.
உலோச்சனார் பாடியது.