நுதி வேல் கொண்டு நுதல் வியர்

349
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே;
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று,
5
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை,
மரம் படு சிறு தீப் போல,
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே.

திணையும் துறையும் அவை.
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.