முகப்பு | தொடக்கம் |
நுதி வேல் கொண்டு நுதல் வியர் |
349 |
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா, |
|
கடிய கூறும், வேந்தே; தந்தையும், |
|
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே; |
|
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று, |
|
5 |
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை, |
மரம் படு சிறு தீப் போல, |
|
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|