முகப்பு | தொடக்கம் |
நும் படை செல்லும்காலை |
169 |
நும் படை செல்லும்காலை, அவர் படை |
|
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, |
|
அவர் படை வரூஉம்காலை, நும் படைக் |
|
கூழை தாங்கிய, அகல் யாற்றுக் |
|
5 |
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, |
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; |
|
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை; |
|
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல் |
|
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், |
|
10 |
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் |
பெரு மரக் கம்பம் போல, |
|
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|