நெல்லும் உயிர் அன்றே

186
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.

திணையும் துறையும் அவை.
மோசிகீரனார் பாடியது.