நோகோ யானே?

234
நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி,
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
5
உலகு புகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.