முகப்பு | தொடக்கம் |
பயம் கெழு மா மழை |
266 |
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, |
|
கயம் களி முளியும் கோடைஆயினும், |
|
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல், |
|
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை |
|
5 |
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் |
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்! |
|
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! |
|
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், |
|
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல, |
|
10 |
வல்லே களைமதிஅத்தை உள்ளிய |
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை, |
|
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் |
|
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|