முகப்பு | தொடக்கம் |
பருத்திப் பெண்டின் பனுவல் |
125 |
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, |
|
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, |
|
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர |
|
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, |
|
5 |
நள்ளாதார் மிடல் சாய்த்த |
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. |
|
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு |
|
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; |
|
குன்றத்து அன்ன களிறு பெயர, |
|
10 |
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; |
'வெலீஇயோன் இவன்' என, |
|
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு |
|
விரைந்து வந்து, சமம் தாங்கிய, |
|
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், |
|
15 |
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் |
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, |
|
'தொலைஇயோன் இவன்' என, |
|
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு |
|
இருக்கை சான்ற உயர் மலைத் |
|
20 |
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
|