முகப்பு | தொடக்கம் |
பருத்தி வேலிச் சீறூர் |
299 |
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் |
|
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி, |
|
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ |
|
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், |
|
5 |
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, |
அணங்குடை முருகன் கோட்டத்துக் |
|
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே. |
|
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
| |
பொன்முடியார் பாடியது.
|