முகப்பு | தொடக்கம் |
பல் சான்றீரே! பல் சான்றீரே! குமரி மகளிர் |
301 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
குமரி மகளிர் கூந்தல் புரைய, |
|
அமரின் இட்ட அரு முள் வேலிக் |
|
கல்லென் பாசறைப் பல் சான்றீரே! |
|
5 |
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்; |
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்; |
|
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள் |
|
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர் |
|
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால் |
|
10 |
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே? |
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண் |
|
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி, |
|
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி, |
|
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென |
|
15 |
வேந்து ஊர் யானைக்கு அல்லது, |
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|