முகப்பு | தொடக்கம் |
பலர்க்கு நிழல் ஆகி |
223 |
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி, |
|
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி, |
|
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும், |
|
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு |
|
5 |
இன் உயிர் விரும்பும் கிழமைத் |
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
|