முகப்பு | தொடக்கம் |
பாசறையீரே! பாசறையீரே! |
285 |
பாசறையீரே! பாசறையீரே! |
|
துடியன் கையது வேலே; அடி புணர் |
|
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப் |
|
பாணன் கையது தோலே; காண்வரக் |
|
5 |
கடுந் தெற்று மூடையின்...................... |
வாடிய மாலை மலைந்த சென்னியன்; |
|
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு |
|
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த |
|
மூரி வெண் தோல் |
|
10 |
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ! |
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக, |
|
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே; |
|
அது கண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து |
|
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர் |
|
15 |
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய, |
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் |
|
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே. |
|
திணை வாகை; துறை ...............முல்லை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|