முகப்பு | தொடக்கம் |
பாடுநர்க்கு ஈத்த பல் |
221 |
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே; |
|
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே; |
|
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே; |
|
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே; |
|
5 |
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; |
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; |
|
அனையன் என்னாது, அத் தக்கோனை, |
|
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று; |
|
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை |
|
10 |
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்! |
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க, |
|
கெடு இல் நல் இசை சூடி, |
|
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.
|