முகப்பு | தொடக்கம் |
பாணர் தாமரை |
12 |
பாணர் தாமரை மலையவும், புலவர் |
|
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், |
|
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி! |
|
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, |
|
5 |
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே? |
திணை அது; துறை இயன்மொழி.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|