முகப்பு | தொடக்கம் |
பால் கொண்டு மடுப்பவும் |
310 |
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், |
|
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, |
|
உயவொடு வருந்தும் மன்னே! இனியே |
|
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், |
|
5 |
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, |
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு |
|
மான் உளை அன்ன குடுமித் |
|
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பொன்முடியார் பாடியது.
|