முகப்பு | தொடக்கம் |
பிறர் வேல் போலாதாகி |
332 |
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர் |
|
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே; |
|
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக் |
|
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; |
|
5 |
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, |
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப, |
|
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, |
|
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, |
|
இருங் கடல் தானை வேந்தர் |
|
10 |
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. |
திணையும் துறையும் அவை.
| |
விரியூர் நக்கனார் பாடியது.
|