முகப்பு | தொடக்கம் |
புலவரை இறந்த |
21 |
புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்! |
|
'நில வரை இறந்த குண்டு கண் அகழி, |
|
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின் |
|
மீன் பூத்தன்ன உருவ ஞாயில், |
|
5 |
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை, |
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், |
|
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய |
|
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என, |
|
வேங்கை மார்பன் இரங்க, வைகலும் |
|
10 |
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர் |
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே! |
|
இகழுநர் இசையொடு மாய, |
|
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே! |
|
திணையும் துறையும் அவை.
| |
கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.
|