முகப்பு | தொடக்கம் |
பெருங் களிற்று அடியின் தோன்றும் |
263 |
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் |
|
இரும் பறை இரவல! சேறிஆயின், |
|
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, |
|
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே |
|
5 |
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, |
கல்லா இளையர் நீங்க நீங்கான், |
|
வில் உமிழ் கடுங் கணை மூழ்க, |
|
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. |
|
திணை கரந்தை; துறை கையறுநிலை.
| |
......................................................................
|