முகப்பு | தொடக்கம் |
பெருஞ் சோறு பயந்து |
220 |
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த |
|
பெருங் களிறு இழந்த பைதல் பாகன் |
|
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, |
|
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு, |
|
5 |
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த் |
தேர் வண் கிள்ளி போகிய |
|
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
|