பொய்யாகியரோ

233
பொய்யாகியரோ! பொய்யாகியரோ!
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!
5
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண்,
போர் அடு தானை, எவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பல' என
வைகுறு விடியல், இயம்பிய குரலே.

திணயும் துறையும் அவை.
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.