முகப்பு | தொடக்கம் |
பொன் வார்ந்தன்ன |
308 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், |
|
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ் |
|
நன்மை நிறைந்த நய வரு பாண! |
|
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் |
|
5 |
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே; |
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை |
|
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே; |
|
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல் |
|
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் |
|
10 |
புன் தலை மடப் பிடி நாண, |
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே. |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
கோவூர் கிழார் பாடியது.
|