முகப்பு | தொடக்கம் |
பொன்னும், துகிரும் |
218 |
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய |
|
மா மலை பயந்த காமரு மணியும், |
|
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, |
|
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை, |
|
5 |
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் |
சான்றோர் பாலர் ஆப; |
|
சாலார் சாலார் பாலர் ஆகுபவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.
|