முகப்பு | தொடக்கம் |
போற்றுமின், மறவீர்! |
104 |
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: |
|
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் |
|
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் |
|
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை |
|
5 |
நுண் பல் கருமம் நினையாது, |
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|