முகப்பு | தொடக்கம் |
மண் கொள வரிந்த |
288 |
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின் |
|
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, |
|
வென்றதன் பச்சை சீவாது போர்த்த |
|
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க, |
|
5 |
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, |
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, |
|
அருகுகை ...................................... மன்ற |
|
குருதியொடு துயல்வரு மார்பின் |
|
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. |
|
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|