முகப்பு | தொடக்கம் |
மதி நிலாக் கரப்ப |
398 |
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, |
|
வகை மாண் நல் இல்........................ |
|
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, |
|
பொய்கைப் பூ முகை மலர, பாணர் |
|
5 |
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, |
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, |
|
பரிசிலர் விசையெ |
|
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், |
|
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் |
|
10 |
புலியினம் மடிந்த கல் அளை போல, |
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், |
|
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, |
|
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, |
|
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! |
|
15 |
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என |
என் வரவு அறீஇ, |
|
சிறிதிற்குப் பெரிது உவந்து, |
|
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் |
|
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் |
|
20 |
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ, |
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, |
|
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, |
|
யான் உண அருளல் அன்றியும், தான் உண் |
|
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, |
|
25 |
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, |
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், |
|
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, |
|
புரையோன் மேனிப் பூத்தசல....................... |
|
முரைசெல அருளியோனே |
|
30 |
........................யருவிப் பாயல் கோவே. |
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
| |
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
|